பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& லா. ச. ராமாமிருதம் விளையாட்டிலோ, மேலே ஏறிக் கீழே விழுந்து அடி பட்டுக் கொண்டுவந்தால், காயம் பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெய் தடவுவாள். இதுபோன்ற அத்யாவசியங்களுக்கன்றி, அம்மாவுக்குப் பிள்ளைகளையோ பேரக் குழந்தைகளையோ தொட்டு உறவாடும் பழக்கம் இல்லை. ஒருசமயம் பேச்சுவாக்கில்: "இந்த நாள் எதற்கெடுத் தாலும் ருஜூ கேட்கிறது. தன்னம்பிக்கையில்லாத நாள். யாருக்கு எதை ருஜுப்படுத்தியாகணும்? என்னை உனக்கா? உன்னையே உனக்கா? நேர்மையில்லாத நாள்:” ஏன் அப்படிச் சொன்னாள்? அப்போது புரியவில்லை. ஆனால் அவள் குமுறல் மீட்டும் தெரிந்தது. முகத்தில் குழுமி விட்ட குங்குமத்தில் குரலில் தெறித்த அனலில், ஏன், ஏன்? இப்போ பு கொஞ்சம், இப்படித்தான், சூத்திரம் போல் என்த்கேனும் சொல்வி விட்டுச் சும்மாவாகிவிடுவாள் கேட்டாலும் சொன் காட் சொன்னேன், டாள் என்னவோ அப்ாே தோணித் போ:ேன்: ' ○ நண்பர்களுடனோ ஆபீஸ் அலுவவிலே வேறு எக் காரணமோ, என் வழக்கநேரம் மீறி நான் வீடு திரும்ப நேர்த் கால் அம்மா வாசவில் உட்கார்ந்திருப்பான் நானும் உள்ளே போகாமல் பக்கத்தில் உட்கார்த்துகொள்வேன் உள்ளே ஒரே ரகளையாயிருக்கும், பேசமாட்டோம். பேசத் தோன் }}