பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மா 53 ● "எங்கே ஆபீஸுக்குக் கிளம்பறியா?” "ஆமாம்” 'ஒரு நிமிஷம் என்னை உன்மேல் தாங்கிக்கோயேன். அதனால் என் அவஸ்தை குறையப் போவதில்லை, மன சுக்குத்தான் ஏதோ ஆறுதல். அம்மாடி!” 'ஒரு வேடிக்கை பார்த்தையா? அன்று தீ குழந்தையா இருந்தபோது மடியில் வளர்த்திண்டேன். இன்று என் வேனையில் உன் தோள்மேல் சாஞ்சுக்கிறேன். கணக்கு சரியாப்போச்சு இல்லே?" ஜே சாகச் சிரிக்கிறாள், 意。 கிராமத்துக்குப் போயிருந்தேன். பழைய நினைவுகளின் ஈர்ப்பு, அங்கே, நாங்கள் விட்டுப்போன கிராமம் இல்லை. மின்சாரம், வானொலி, ஒலிபெருக்கி, இரைச்சல் எல்லாம் புகுந்தாச்சு நாட்டில் கிராமங்களே இப்போது இல்லை. அது ஆறுதலுமில்லை. எதிர் வீட்டில் முதலியார், அவர் குடும்பம்? இடமே சிதிலமாயிருந்தது. வில்லி, நீ வரும்வரை காத்திருப்பார்களா? என்ன எதிர் பார்க்கிறாய்? காத்திருக்கணுமா? எங்கள் வீடு, ஆவலுடன், ஆசையுடன் வாசற்படி, மிதித்ததும் குரைத்துக்கொண்டு ஒரு நாய் வெளியே வந்தது. "உஷ-down, down, ஜிம்மி, யார் சார் நீங்க? யார் உங்களுக்கு வேனும்?’’