இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பயிற்றங்காய் தன்னைப்
பறிக்காதே, பெருக்கட்டும்.
வயலூரு சந்தையிலே
வாங்கிவந்த வெற்றிலையை,
ஈரத்துணி சுற்றி எடுத்துவை '’
என்று சொன்னுள்,
ஊருக்கே பேரழகி
உடனே அதைச்செய்தாள்.
★
அங்காடி விற்றுவரும்
மங்கம்மா மறுபடியும்
சங்கீதம் பாடுகின்ற .
பெண்வண்டு முகம்நோக்கி,
”ஏடுவிட்டுக் கொண்டிருக்கும்
இளவாழைக் கன்றுக்குப்
பாடுபட்டுக் கண்ணிர்
பாய்ச்சி வளர்த்துள்ளோம்.
வேலி, வெகு மோசம்.
ஆடெல்லாம் ஊசிக்குள்
நூலுபோலே புகுந்து
தின்றுவிடும், பார்த்துக்கொள்.
வயல்துழையும் காவிரியே,
வளர்ந்துவரும் நெல்குருத்தே !
தயிர்க்காரி இங்குவந்தால்
சில்லரையைக் கொடு”-என்று
9