இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
செல்லம் குடியிருக்கும்
தெருவில் முழங்குகின்ற
கல்யாண வாத்தியத்தின்
ஒசைவர, அதைக்கேட்டு
”பெரியநிலா முளைக்கும்
பருவமலர் தெளித்த
பஞ்சணையிலே படுத்து
அன்புக்கு அன்புதந்து
ஆனந்தக் காதல்செய்து
பொன் அழகன் தேகத்தைப்
போர்த்தபடி தூங்க, அந்த
அன்னத்தால் இனிமேலே
ஆகும். அதுபோலே
என்றைக்கு அந்த
இன்பம் எனக்குவரும் ?
‘பொதிகைமலைச் சந்தனமே !
பூவுலகில் எல்லோரும்
மதிக்கும் தமிழே! என்னை
மயக்குகின்ற போதையே!
ஒடிநிலம் கழுவும்
ஒடையிலே பூத்திருக்கும்
வாடாமலரே, அதன்
வாசனையே, எச்சில்முத்தம்
ஒசையுடன் கொடுத்து
உதவுவாய்' என்றுஎன்னை
ஆசையுடன் கேட்கஒரு
அத்தான் கிடைப்பதெந்நாள் ?
12