இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மாவிலைத் தோரணம் மாதிரி உட்கார்ந்து-மர
மட்டையிலே தொங்கும் கொட்டைப் பழங்களை,
காவிநிற மூக்கால் கொத்தையில், ஏற்படும்
காயத்தை ஆற்றுவ தார்-கிளியே
காயத்தை ஆற்றுவ தார்?
சாயக் கடலிலே, சந்திரன் தோணையிலே-நீ
சத்து நிரம்பிய முத்தம் கொடுத்ததால்
வாயிலே தாமரை வர்ணம் கலந்தது
வாலிபம் ஏற்பட் டது-பெண்ணே
வாலிபம் ஏற்பட் டது !
33