இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தித்திப்பு லோகம்
புருவத்தின் அடி யிலே
பிறந்த கண்ணை மயக்க
திருநாள் சிலையை போலே
அலங்காரம் செய்து கொண்டாள்
அழுக்கு நிலா வெளிச்சம்
அடிக்கை யிலே, கோவைப்
பழத்தில் பழம் போலே
பதியவைத் தாள் உதடு.
கத்திரிப் பூவு சேலை
கலைய, கூந்தல் கலைய,
தித்திப்பு லோகம் தன்னில்
துாங்கி விட்டாள் சோர்ந்து.
இருவிழி தவிர மற்
றெல்லாம் நனைந்த படி
கரையேறி னள் குளித்து
காயாக சேலை யோடு.
36