பக்கம்:உதட்டில் உதடு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாசித்து முடித்தாள். முடிந்ததும் உதடுகள்
சந்தோ ஷத்தால் சிவந்து போயின !

அடுத்தநாள், உதயம், நடுப்பகல், முடிந்து
அந்தி நேரம் வந்து பிறந்தது.
அத்தான் ஞாபகம் அவளுக்குச் சுரந்தது.

உடனே அந்தக் குடும்பத் தலைவி
நாயின் நாக்கு போன்ற பாதம்
நாட்டியம் ஆட, தோட்டம் சென்று
பூவும் அரும்பும் பறித்துச் சூடி
வெள்ளைச் சிரிப்புடன் உள்ளே வந்து
புடவை மாற்றி பொட்டு திருத்தி
அழகை உடம்பிலும் அன்பை நெஞ்சிலும்
தேக்கிக் கொண்டே, திறந்த விழியும்
துடித்த நினைப்புமாய், படுத்துக் கிடந்தாள்.

"அன்னமே!” என்று அழைத்த படியே
ஆளன் வந்தான். அழகி பறந்து
”மச்சான் !” என்று மார்பில் படிந்தாள்.
வெடுக்கென் றணைத்தான். ”விடாதீர்” என்றள்
உடனே,
உதட்டில் உதடு புதைத்து எடுக்கும்
முத்தம், அதுதரும் சத்தம்-வளர்ந்தது.
இருந்த வெளிச்சம் இவர்களால் அணைந்தது!


7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/9&oldid=1067156" இலிருந்து மீள்விக்கப்பட்டது