பக்கம்:உதயம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருமால் திருப்பள்ளியெழுச்சி

9

சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க

இயக்கரும் மயங்கினர் திருவடித் தொழுவான்

அந்தரம் பாரிடம் இல்லமற் றிதுவோ?

அரங்கத்தம் மா! பள்ளி எழுந்தரு ளாயே.                     7

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க

மாநிதி கபிலேஒண் கண்ணுடி முதலா

எம்பெரு மான்படி மக்கலம் காண்டற்கு

ஏற்பன ஆயின கொண்டுகன் முனிவர்

தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ?

தோன்றினன் இரவியும் துலங்கொளி பரப்பி

அம்பர தலத்தினின் றகல்கின்ற இருள்போய்

அரங்கத்தம் மா பள்ளி எழுந்தரு ளாயே.                      8

ஏதமில் தண்ணுமை எக்கம் மத்தளி

யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி 

கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்

கந்தரு வரவர் கங்குலுள் எல்லாம் 

மாதவர் வானவர் சாரணர் இயக்கர்

சித்தரும் மயங்கினர் திருவடித் தொழுவான்

ஆதலில் அவர்க்குநாளோலக்கம் அருள

அரங்கத்தம் மா! பள்ளி எழுந்தரு ளாயே.                      9


கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன. இவையோ?

கதிரவன் கணைகடல் முளேத்தனன் இவனே ?

துடியிடை யார்சுரி குமுல்பிழிந் துதறித்

துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா 

தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து

தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடி என்னும்

அடியன அளியனென் றருளிஉன் அடியார்க்கு

ஆட்படுத் தாய் பள்ளி எழுந்தரு ளாயே.                        10

              ————————

உ. 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/11&oldid=1198134" இலிருந்து மீள்விக்கப்பட்டது