பக்கம்:உதயம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

உதயம்

கல்லாய மனங்களும் கரையப்பொன் னெளிதான்

கண்டது கங்குலும் விண்டது தொண்டர் 

பல்லாரும் எய்தினர் பாடியின் றடிப்

பரவுகின் றரன்பு விரவுகின் றராய் 

நல்லார்மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும்

நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே 

எல்லாம்செய் வல்லவென் அருட்பெருஞ் சோதி

என்தெய்வ மேபள்ளி எழுந்தரு ளாயே.                   4

புன்மாலே இரவெலாம் புலர்ந்தது ஞானப்

பொருப்பின்மேற் பொற்கதிர் புலர்ந்தது புலவோர்

சொன்மாலை தொடுத்தனர் துதித்துகிற் கின்றர்

சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம் 

மன்மாலே மாலேயா வந்துசூழ் கின்றர்

வானவர் நெருங்கினர் வாழியென் கின்றர் 

என்மாலே அணிந்தஎன் அருட்பெருஞ் சோதி

என்பதி யே.பள்ளி எழுந்தரு ளாயே.                       5

ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே

ஊதின சின்னங்கள் ஊதின சங்கம் 

பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்

பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார் 

அருமையும் எளிமையும் ஆகியன் றகி

அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே 

இருமையும் அளித்தளன் அருட்பெருஞ் சோதி என்னர சேபள்ளி எழுந்தரு ளாயே. 6

சினேப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்

சிவசிவ போற்றியென் றுவகைகொள் கின்றர்

தினேப்பள்ளி உண்ணத்தெள் ளாரமு தளிக்கும்

நேரமிங் நேரமென் ருரியர் புகன்றர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/16&oldid=1198233" இலிருந்து மீள்விக்கப்பட்டது