பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33 ————————||||

உப்புமண்டித் தெரு



விருந்துச் சோறும் இல்லை
மருந்துச் சோறும் இல்லே!
போய் வேலைய முடிங்க-
மீதிப்பக்கத்து
வேலியையும் அடைச்சுப்புட்டுதான்
வீட்டுக்குக் கிளம்பணும்!
போங்க! போங்க!”

மாடிக்குப் போய்விட்டார்!
அவருடைய கோபம்,
சுயதவறின் உறுத்தல்
தணியும் வரை
சாப்பிடவே மாட்டார்!
அவர் வழக்கம்
அப்படி...!

நாற்பது ரூபாய் புது எவர்சில்வர்
போனஸாகத்
தட்டோடு
'அந்தத் தோட்டிக்கு
மொய்' எழுதப்பட்டு விட்டதால்
மூன்று மருமகளும்
கோரஸாக
தன் மீது படிக்கும்
குற்றப் பத்திரிகையையும்
பொருட் படுத்தாமல்
மூலையில் கிடந்த
ஸோபாவில் விழுந்து