பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39———

உப்புமண்டித் தெரு



  நாலுகால் பாய்ச்சலில்
  ஒடின!
  தலை தெறிக்க ஒடின!


  பள்ளம் படுகுழிகளில்
  விழுந்து எழுந்து
  எழுந்து விழுந்து
  லொட லொடத்த
  வண்டி ஒடத்துவங்கிற்று !


  வழியில்
  ஒரு மதகுப் பாலம்!


  அந்தப் பால மேட்டில்
  வண்டி
  வேகமாக ஏறிஇறங்கும் போது -
  வண்டியின் வலது சக்கர
  இரும்புக் கட்டு மட்டும்
  தனியே கழன்று
  ரோசத்தோடு
  வண்டியின் முன்னேயே
  ஒடி
  ஒரு குட்டி விளையாட்டை
  நடத்தி விட்டு
  பக்கத்தில் இருந்த
  வாய்க்காலின்
  வயிற்றுக்குள்
  சரணடைந்து விட்டது!