பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63 ————————||||

உப்புமண்டித் தெரு

உடனே

ஒடி வரமாட்டான்...!


"அப்படி என்றால்?"

- விதண்டாவாதி

வெறுப்போடு கேட்டார்!


"நீங்கள் தான்

அவனைப் போய்ப்

பார்க்க வேண்டும்....!

- வேதாந்தி

அமைதியாகச் சொன்னார்!

"எங்கே கடற்கரையிலா...?”

- விதண்டாவாதி

ஆத்திரத்தோடும்

கிண்டலோடும் கேட்டார்!


"பளீரென்று சிரித்த

பரம நம்பி

பகுத்தறிவுச் சிங்கத்தை

ஏறிட்டுப் பார்த்து

இந்த 'கடற்கரை

மாநாட்டு புத்தி'

உங்களை விட்டுப் போகவே

போகாதா..?” என்றார்.

பகுத்தறிவுப் பெருந்தகையாளருக்குப்

பற்றிக்கொண்டு வந்தது எரிச்சல்!