பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

193


இந்தக் கேள்வி, மைமனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மிகச் சாதாரணமாக இந்தக் கேள்வியை, ஏதோ ஒன்றும் தெரியாதவனைக் கேட்பது போல உமார் கேட்டான். இருப்பினும் மைமன் பதில் கூறினான். “விண் மீன்கள் நிலையாக இருக்கின்றன. நிசாப்பூரிலிருந்து நாம் அவற்றைப் பார்க்கும் கோணத்திற்கும், டோலமி ஆராய்ச்சி செய்த இடமான அலெக்சாண்டரியாவிலிருந்து பார்க்கும் கோணத்திற்கும் வேற்றுமையுண்டு. அந்த வேற்றுமையின் அளவுக்கு, அந்த அட்டவணையை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.”

“சரி, அலெக்சாண்டிரியாவிலிருந்து அவை பார்க்கப்படவில்லை; ஆராய்ச்சி செய்யப் படவில்லை என்று இருந்தால்...!

“அது எப்படி? அறிஞர் டோலமியின் ஆராய்ச்சிக்கூடம் அலெக்சாண்டிரியாவில்தானே இருந்தது?”

“ஆம்! அந்த விஷயத்தில்தான் நாம் தவறு செய்திருக்கிறோம்!”

பொறுமையிழந்தவனாகவும், புரிந்து கொள்ள முடியாதவனாகவும் இருந்த மைமன், உமாரை நோக்கி, “தங்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது” என்று மெதுவாகக் கூறினான்.

“இல்லை, கவனி. அலெக்சாண்டிரியாவில் ஆராய்ச்சி செய்த அறிஞர் டோலமி இந்த அட்டவணையைத் தயாரிக்கவில்லை. இது வேறோர் இடத்திலே, எப்பொழுதோயிருந்த யாரோ ஒருவரால், அவருடைய, காலத்துக்கு முன்னாலேயே தயாரிக்கப் பட்டிருக்கிறது. இதை இன்று நாம் பயன்படுத்துவது போல - அவரும் பயன்படுத்தி வந்திருக்கிறார். நாம் இது டோலமியின் அட்டவணை என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம் . ஆனால், அவருக்கு இது யாரால், எந்த இடத்தில் தயாரிக்கப்பட்டதென்பது நன்றாகத் தெரியும். ஆகவேதான் அவருடைய ஆராய்ச்சி முடிவுகள் சரியாக இருந்திருக்கின்றன.”

மைமனுடைய கண்களிலே புதிய ஒளி பிறந்தது. இப்பொழுதுதான் அவனுடைய குழப்பம் தெளிந்தது. திடீரென்று

உ.க. 13