பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

261


தன் கீழேயிருந்த இரத்தினக் கம்பளத்தின் நெசவமைப்பைப் பார்த்துக் கொண்டே “கிரகங்களின் பலனைப் பற்றி நான் சுல்தானுக்குப் பொய் கூறவேண்டு மென்பதும் திருவுள்ளக் கட்டளைதானோ?” என்று உமார் கேட்டான். அவனுடைய மனதில் ஒரு குழப்பம் இருந்தது. ஆனால் அதோடு தனக்கு என்று ஒரு திடமும் கூடவே வந்ததை உமார் அறிந்து கொண்டான்!

உமாருடைய கேள்விக்கு பதிலுக்குத் தானே ஒரு கேள்வி கேட்டார் அவர்.

“நட்சத்திரங்களைக் கொண்டு ஒரு மனிதனின் விதியையறிந்து கொள்ளலாம் என்பதை நீ நம்புகிறாயா?” என்றார் நிஜாம்.

“இல்லை.” என்றான் உமார்.

“நானும்தான் நம்பவில்லை” என்று புன்சிரிப்புடன் கூறிய நிசாம் இனிமேலாவது உமார் தன் ஏற்பாட்டுக்கு ஒத்து வருவானா என்று எண்ணினார். “நட்சத்திரங்களால் காணப்படும் பலன் பொய்யாக இருக்குமானால் சுல்தான் மாலிக்ஷா அவர்களை வெற்றிப் பாதையில் வழிநடத்தக் கூடிய ஒரு நல்ல பலனை நீ ஏன் கூறக்கூடாது? அவருக்கு எழுத நீ ஏன் மறுக்கவேண்டும்?” இப்படிக் கேட்ட நிசாமுக்கு, சில நாட்களாக அவரைக் குழப்பி வந்த ஒருவிஷயம் நினைவுக்கு வந்தது. உடனே அதையும் கேட்டார்.

“காசார்குச்சிக்கிலிருந்து நீ அனுப்பிய கடிதம் என் கைக்குக் கிடைப்பதற்கு நான்கு நாட்கள் முன்னதாக, ஹசைன் இபின் சாபா என்ற ஒரு மனிதன் என்னிடம் வந்தான். வருங்காலத்தையறிந்து சொல்லக் கூடிய திறமையுள்ளவன் என்று கூறி, இன்னும் சிலநாட்களில் தங்களுக்கு, அரசருடைய வானநூற் கலைஞரிடமிருந்து “முடியாது” என்ற ஒரே சொல்லுடன் ஒரு கடிதம் வரும் என்று கூறினான். இந்த ஹாஸான் என்பவன் யார்? அவனிடம் நீ இரகசியங்களைக் கூறவேண்டிய காரணம் என்ன?

“அவன் ஒரு புதிய மதபோதகன்! ஜெருசலத்தில் அவன் என்னுடன் பேசினான். ஆனால் அந்தச் செய்தி