பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328


அந்தக் குடியானவர்கள் தங்களுக்குள்ளே ஏதோ, மெதுவாகப் பேசிக் கொண்டார்கள். பிறகு உமார் ஏறிவந்த குதிரையைப் பிடித்துக் கொண்டு சென்றார்கள். யாரும் கவனிக்காதபோது நிழலோடு நிழலாக மறைந்து வந்த ஒரு சிறுமி அந்தப் புறாக்கூண்டின் பக்கத்திலே வந்து உட்கார்ந்துகொண்டு, அந்தப் புதிய மனிதனான உமார் கவனிக்காத நேரம் பார்த்து கூண்டுக்குள்ளே கையைவிட்டு அந்தப் பறவைகளின் இறக்கைகளைத் தொட்டுப் பார்த்தாள்.

ஆகாரமில்லாமல் களைத்துப்போயிருந்த உமார், தன் கைகளின்மேல் தலையை வைத்துக் குந்தியபடி உட்கார்ந்திருந்தான். அவன் கழுகுக் கூட்டிலிருந்து தப்பி வந்துவிட்டான்.

ஆனால், ஹாஸானுடைய ஆட்களின் கையிலே சிக்கிக்கொள்ளாமல் தப்பமுடியும் என்ற நம்பிக்கை வரவில்லை.

‘இந்தப் பிரம்பு வீட்டுக்குள்ளே நீ எப்படி இவற்றைக் கொண்டு வந்தாய்!’ என்று அந்தச் சிறுமி கேட்டாள். திரும்பிப் பார்த்த உமார், அந்தப் பெண் பயந்து ஓடுவதைக் கண்டான், பயந்து ஒடினாலும் அந்தப் புறாக்களை விட்டுப்போக மனமில்லாமல் “நான் அவற்றைப் பார்த்திருக்கிறேன். அவை மேலே வானத்தில் உயர உயரப் பறக்கின்றன. சில சமயம் மரங்களின்மேல் உட்காருகின்றன நான் அருகில் போனால் பறந்து விடுகின்றன’ என்றாள்.

பிறகு வருத்தத்துடன், ‘வயலில் தானியங்களைத் தின்னமட்டும் வருகின்றன. என்னோடு விளையாடக் கூப்பிட்டுக்கொண்டே போனால் பறந்து போய்விடுகின்றன. என்மேல் அவற்றிற்கு ஏன் கோபமோ தெரியவில்லை’ என்றாள் மெல்ல.

‘அவை, உன்னருகில் வந்து, உன் கால்களைச் சுற்றிக்கொண்டு திரிய வேண்டுமா?” என்று கேலியாக உமார் கேட்டான்.

‘ஆமா ஆமா! நீ வரச் சொல்லுவாயா?’ என்று ஆவலுடன் கேட்டாள் சிறுமி.

பக்கத்தில் இருந்த குளக்கரையிலே போய் உமார் சிறிது களிமண் எடுத்து வந்தான். இரண்டு கைநிறைய இருந்த களி