பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356

நட்சத்திரங்கள் அசையவேயில்லை என்று கூறிக்கடவுள் நிந்தனை செய்தது ஒரு குற்றம்.

இந்தக் குற்றங்களை விவாதிக்க வேண்டுமென்ற தேவையில்லையென்றும், இந்த மதத்துரோகி, இந்தக் குற்றங்களைச் செய்தான் என்பது நாட்டிலேயுள்ள நம்பிக்கையுள்ளவர் அனைவருக்கும் தெரிந்த விஷயமென்றும், இப்பொழுது விவாதிக்க வேண்டியதெல்லாம், இந்த மதத்துரோகியினுடைய புத்தகங்களுக்கும், இந்தப் புத்தங்களை எழுதிய ஆசிரியரான உமார்கயாமுக்கும் என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்பதேதான். நீதிபதிகள் ஆராய்ந்து சரியான தீர்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று சொல்லி நிறுத்தினார் அந்த முல்லா.

முல்லா உட்கார்ந்ததும், பல்கலைக் கழகத்திலே டாக்டர் பட்டம் பெற்ற ஒரு பேராசிரியர் எழுந்து, முல்லா கூறிய குற்றச்சாட்டுகளை யாரும் மறுப்பதற்கில்லையென்றும்,

ஆனால், பலரும் அறியாத ஒரு பெருங்குற்றம் மற்றொன்று இருக்கிறதென்றும் கூறினார். எல்லோரும் ஆவலுடன் அவர் கூறப்போவதை எதிர்பார்த்தார்கள்.

‘உமார் கயாம் அவ்வப்போது நாலடிப் பாடல்கள் பல எழுதியிருககறான. அவை ஒரு புத்தகமாகத் தொகுக்கப் படவில்லை. ஆனால், மூலை முடுக்குகளிலேயுள்ள பலர் இவற்றை மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். திருக்குரானுக்குச் சவால்விடும் பாடல்களாக இதைக் கையாளும் சிலரும் இருக்கிறார்கள்,

இந்தப் பாடல்கள் சிலவற்றை நான் தொகுத்து வைத்திருக்கிறேன். நம்முடைய மதம், கலாசாரம், பழக்கவழக்கம் இவற்றிற்கெல்லாம் விரோதமான முறையிலே இந்தப் பாடல்கள் எழுதப்பெற்றுள்ளன. சபையினர் அனுமதித்தால் மத விரோதமான இந்தப் பாடல்களைப் பாடிக் காண்பிக்கிறேன். அதே சமயம், திருமறை கேட்டவர்கள் செவிகளிலே படும்படி என் வாயால் இந்தத் தீயயாடல்களைப் பாடும்படி நேரிட்டதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.