பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பல நூற்றாண்டுகளாக உலகம் தட்டையானது என்றும், சலனமில்லாதது என்றும், சூரியன் பூமியைச்சுற்றி வருகிறதென்றும் கருதப்பட்டு வந்தது. இதுபோன்றே மேலோட்டமான பார்வை காரணமாகவே மனிதன் புழு, பேன், மீன் போன்ற உயிருள்ளவை, தாங்களாகவே சேற்றிலும், சாணத்திலும், பூமியிலும் தோன்றுகின்றன என்று நம்பினான். எதிர்பாராமல் கூட்டம் கூட்டமாக உயிர்ப் பிராணிகள் காணப்படும் இடங்களில் எல்லாம் இவ்வாறு அவை தாமாகவே தோன்றியிருக்க வேண்டுமென்றே மனிதன் நினைத்தான். இன்றுகூட விஞ்ஞான அறிவில்லாத மக்கள் புழுக்கள் சாணத்திலிருந்தும், பூச்சிகள் அழுக்கிலிருந்தும், பேன்கள் வியர்வையிலிருந்தும் தோன்றுகின்றன என்று நம்புகிறார்கள். சாணம், இறைச்சி, அழுக்கு இவற்றில் முட்டையிட்டு, அம்முட்டைகள் குஞ்சு பொரிப்பதால் இந்த ஜீவராசிகள் தோன்றுகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது.