இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

39


நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, புராதனக் கடல்களில் புரதம் தோன்றிய நிகழ்ச்சி பொருள்களின் பரிணாமத்தில் உயிர் தோன்றும் கட்டத்துக்கு முன்னோடியாக இருந்தது. அதனை மிகவும் முக்கியமான நிகழ்ச்சியென்றே கூறலாம். சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலும்கூட புரதங்களின் பண்புகளைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு அதிகம் தெரிந்திராததால், புரதங்களில் நமக்கு தெரியாத ஒரு வஸ்து இருப்பதாகவும், புரதங்களிலுள்ள குறிப்பிட்ட அணுச்சேர்க்கையில் உயிர் தங்குவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள். இந்நம்பிக்கைக்குக் காரணம் புரதங்கள் தோன்றிய விதத்தை ஆராய்வது கடினமாகவும், அதுபற்றிய கொள்கைகள் நம்பத்தகாதனவாகவும் இருந்தமைதான். ஆனால் புரதத்தின் கூட்டணுவைப்பற்றி, இன்று நமக்குத் தெரிந்திருக்கும் விவரங்களைக் கொண்டு ஆராய்ந்தால் பழைய கொள்கைகள் ஆதாரமற்றவை என்று தெரிகிறது. புரதங்களைப் பற்றிய பண்புகளைப் பற்றி ரசாயனம் கண்டுள்ள முடிவுகளைச்சுருக்கமாக கீழ்க்கண்டவாறு கூறலாம். வீடுகட்ட ஆயிரக்கணக்கான செங்கற்கள் தேவையாவதுபோல, புரதக் கூட்டணுக்கள் அமினோ அமிலங்கள் என்னும் கூட்டுப் பொருள்களால் ஆக்கப்பட்டவை. அமினோ அமிலங்கள் ரசாயனக் கவர்ச்சியினால் ஒரு குறிப்பிட்ட வகையில் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு புரதங்களில் இத்தொடர்களில் அமினோ அமிலக் கூட்டணுக்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கிலிருந்து ஆயிரக்கணக்குவரை வேறுபடலாம். இத்தொடர் மிகவும் நீளமானது. பல புரதங்களில் இது மிகவும் சிக்கலான முறையில் முடிச்சுகள் போலச் சுருட்டப்பட்டுள்ளன. ஆனால் இணைப்பில் ஒருவித ஒழுங்கும் காணப்படுகிறது. ஒரே புரதக் கூட்டணுவில் பல்வேறு வகைப்பட்ட அமினோ அமிலக் கூட்டணுக்கள் உள்ளன. புரதக்கூட்டணு பலவேறுவிதமான"செங்கற்”களால் ஆக்கப்பட்டன. இயற்கை