பக்கம்:உயிரில் கலந்தது.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8


எனும் புனிதப்பணி எப்படி எப்படியெல்லாம் அலைக்கழியத் தோடங்கிவிட்டது. முரடர்களேயும் கன்னியையும் வைத்துக் கொண்டு அயல் நாட்டவரான எ. ஜி. கார்ட்னரின் தலையில் கையை வைத்திருக்கிருரே இந்த மனிதர்?...இம்மாதிரி இலக்கியத் திருடர்களே சமுதாயத்தில் அனுமதிக்கவே. கூடாது. பேராசிரியர் கல்கி போன்றவர்கள்கூட இப்போது இல்லையே? ஒன்றிலிருந்து வேறு ஒரு சிந்தன பிடிப்புக் காட்டிற்று. கதை எழுதவேண்டும், தாம் எழுதும் எழுத்துக் கள் எல்லாம் அச்சில் ஏறிவிடவேண்டும் என்று இதே நினை வாகச் சுற்றி அலைந்து தம்மைத் தொந்தரவு செய்த ஊர்க் காரர்கள், வேண்டியவர்கள், அறிமுகம் அற்றவர்களின் ஞாப கத்தைக் குழப்பிவிட்டது, காலம்.பழங்காலம் கல்கி அவர்கள் சொன்னது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கி றது. எழுத்தாளன் என்ற தகுதிக்கு ஒருவன் லாயக்கா, இல்லையா என்பதைப் பார்க்கவேண்டுமானல், அவனுடன் ஒரு நிமிஷம் சம்பாஷணை செய்து பார்த்தாலே, புரிந்துவிடும். என்பார்கள். எழுத்தாளர்கள் பெருகவேண்டும், அவர்களுக் குத் தகுதியும் பக்தியும் பண்பும் இருக்கும் பட்சத்தில், எழுத். தாளன் என்றால் அவன் இரண்டாவது பிரம்மாபோல, ஊம், இப்போதுதான் யார் யாரோ கிறுக்கத் தொடங்கிவிட்டார் கள். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் கதைதான்; வரட்டும், வரட்டும்! புதிய அமைப்பு ஒன்றை நிறுவி, எழுத் தாளச் சகோதரர்களை ஒன்றுகூட்டி இதுபற்றி விவாதிக்க வழி செய்தால்தான் நல்லது’ .

தீ பிடித்தது - சிகரெட்டில். புகை கலைத்தது - நெஞ்சில்,

இருந்த இடத்தில் இருந்துகொண்டு நீலத்திரையை ஒதுக்கினர் அவர். ஒதுங்கிக் கிடந்தன பஞ்சுப் பொதிகள்: பெல்ஜியம் நிலைக்கண்ணுடி பிரதிபலித்துக் காட்டுகின்றiபஞ்சுக் கூட்டங்களின் நினைவை எண்ணமிட்டார். ஒட்டிக் கிடந்தது நீலவண்ணக் குழம்பு. ஐந்தாறு நீலோத்பல மலர்களை