பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை வழிகாட்டி வேற்றுமையைச் சாக்காகக் 15 கொண்டு, காட்டுமிராண்டித் தனத்தைக் கையாண்டு, படுகொலைகள் பல செய்துள்ளனர். மதச் சீர்திருத்தவாதிகளின் வரலாறுகள் இத்தகைய சோகச் சம்பவங்களையே நிரம்பக் கொண்டவையாக இருக்கக் காணலாம். இந்து மார்க்கத்துக்கு அவர் செய்ய எண்ணிய திருத்தங் மத வெறி கொண்டோரும். ஆதிக்கக்வாரர்களும் விரும்பவில்லை. களை, சிலகாலமாகவே, வடநாட்டிலே சில பத்திரிகைாளில் காந்தியார்மீதும், அவர் சகாக்கள்மீதும், பலாத்கார வெறிச் செயல்களைத் தூண்டும் முறையிலேயேகூட எழுதப்பட்டு வந்தன. அவருடைய மாலைநேரப் பிரார்த்தனைக் கூட்டங்களிலே சென்று கலகம் விளைவிக்கவும், அவர் இந்து மார்க்கத்தைக் கெடுக்கிறார் என்று கூச்சலிடவும் செய்தனர். இரண்டோ? நாள், இந்தச் செயல்களின் காரணமாக அவருடைய பிரார்த்தனைக் கூட்டங்கள், நடைபெறாமலேகூடப் போயின. மலர் ஒவ்வொரு பிரார்த்தனைக் கூட்டத்திலும், அவர் இந்தத் தவறான போக்கை விளக்கி, அன்பும் விவேகமும் வேண்டும் என்று அறிவுரை கூறியபடியே இருந்தார். அதே முறையிலே தமது அரிஜன் பத்திரிகையிலும் எழுதிக்கொண்டிருந்தார். தமது நோக்கத்தின் தூய்மையை விளக்கிவந்தார். வெறியர்கள் திருப்தி கொள்ளவில்லை. வெளிப்படை யாகவே இது தெரியலாயிற்று.