பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை வழிகாட்டி 17 சதிகாரக் கும்பல் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. சர்க்கார் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருப்பதுடன், நாடெங்கும். எவ்விதமான நிலைமையையும் சமாளிக்கத்தக்க முன்னேற்பாடுகளையும் செய்துள்ளனர். இந்தத் துக்ககரமான சம்பவத்தால், நாடு, தன் நிதானத்தை இழந்துவிடக்கூடாது என்பதுதான், நானில மெங்குமுள்ள நல்லறிவாளர்களின் வேண்டுகோள்; அறவுரை. தண்ட சதிச்செயலைக் கண்டுபிடித்து. அவர்களைச் சட்டம் கடிக்கும். சர்க்காருக்கு அதற்கான சக்தியும் திறமையும் இருக்கிறது. நமது ஒற்றுமையுடன் கூடிய நிலை, அதற்குப் பக்காலமாக நிற்கவேண்டும். ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலையைப் பெற்று, அந்த சாசனத்தைத் தயாரிக்கும் அரும் பணியிலே ஈடுபட்டு, அமைச்சர்கள் தமது அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நேரத்தில், சுழல் துப்பாக்கிக் கொண்டு, அவ்வளவு பேரையும், ஏழு அமைச்சர்களையும் சுட்டுக் கொன்றாள், பர்மாவில் சில காலத்துக்கு முன்பு. இன்றும், குண்டு பாய்ந்த அந்த சடலங்களை வைத்துக்கொண் டுள்ளனர். அமைச்சர்களை, அவர்களின் தலைவம் அவுங்சானைச் சுட்டு வீழ்த்தினால், அரசு கவிழ்ந்துவிடும் என்று அறிவிலிகள் எண்ணினர். ஆனால். பர்மா நிதாளம் தவறாமல், துக்கத்திலே தன் மனதைப் பறிகொடுத்துவிடாமல், கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, கடமையைச் செய்து வருகிறது. அது நம் அண்டை நாடு - சிறிய நாடுதான். அந்தச் சிறிய நாடு காட்டிய பெரிய உறுதி,நமக்கும் வேண்டும். மனக்குழப்பம் மனமாச்சரியம் எழக்கூடாது. உலகிள் கண்கள் நம்மீது பாய்ந்துள்ள நேரம் - உரிமை கிடைத்துள்ள வேளை - உலுத்தர் சிலரின் செயலால் உள்ளம் கெட்டுவிட இடந்தராமல் உறுதியுடன் நின்று, நாட்டு நிலையைக் காப்பாற்றுவோமாக! 2