பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமரை இழந்தோம் மாபெருந் தலைவருக்குக் காட்டும் மரியாதை. செலுத்தும் காணிக்கையாகும் என்பதை அறிந்து யமுனைக்கரையிலே மூண்ட தீயை, தியாக தீயாக்கி, அனைவரும் ஒன்றுபட்டு நிற் போம். அவர் விரும்பியது அதுதான் - அவர் பணி புரிந்ததும் அதற்கே, குரோதம் நீங்கித் துவேஷத்தை விரட்டி, அனைவரும் ஒன்றுபட்டு நின்று. நாட்டுப் பணிபுரியுங்கள் — என்றே அவர் கூறிவந்தார் அந்தப் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத் திலேயே, மாபாவியால் கொல்லப்பட்டார். அவருடைய மறைவு மனவேதனை தகுவதோடு நில்லாமல், தமது மனதுக்குப் புதிய உறுதியைக் கொடுத்துப் புதிய உண்மை யைக் காட்டுமாக. - மகாத்மாவின் ஆவியைக் குடித்தான் பேயன்: அவரை இழந்தோம் அவனி அவரை மறவாது!

    • உலகிலேயே படைபலமும் ராஜ தந்திர பவமும் மிகுந்

தோர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு வெற்றி காண முடியும், ஆயித பலமுமின்றி" என்ற திடமனதை எந்த உத்தமர் உண்டாக்கினாரோ, அவரை ஏகாதிபத்தியமே பணிந்துவிட்ட நேரத்தில் எவனோ வெறியன், சுட்டுவிட் டான். இந்த நாடும் உலகமும் இதனை மறப்பதற்கில்லை. நமது வாழ்நாளிலே, நாடு விடுதலை பெறக்கண்டோம்; நாம் சாகு முன் ஆங்கில நாட்டுக்கு நாமோர் அடிமை என்று இருந்த இழிவு நீக்கப்பட்டு, அதனால் தமது மக்களெல்லால தலை நிமிர்ந்து நின்று, பூரித்து நமது தலைமுறை மகத்தானது என்று மார்தட்டிக் கூறினோம். இன்னே, மாபாணியினால் மகாத்மா கொல்லப்பட்ட காலத்திலே வாழ்ந்தவர்கள் நாம் என்ற துக்கம், மனதைப் பிய்த்துத் தின்னுகிறது. அவருடைய முப்பதாண்டுப் பணியிலே, ஒரு கடுமையான சொல், ஒரு நேர்மையற்ற செயல். ஒரு சுய நலத் திட்டம் இருந்ததில்லை. அவருடைய சேவையினால் ஏற்பட்ட செல் வசக்கு இந்தியாவின் ஒளியையும் ஆசியாவின் புகழையும், நிறத்திமிர்கொண்டு இறுமாந்திருந்து ஐரோப்பிய வல்லரசு