பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 உலகப் பெரியார். காந்தி களுக்கும் கிலி உண்டாகக் கூடிய அளக்குப் பரப்பிற்று. அவருடைய மொழியைக் கேட்க வெளிநாட்டு அரசாங்கத் தலைவர்கள் ஓடோடி வந்தனர். அவர் மண் குடிசையிலே தங்கினால், அங்கு செல்வதை மதிப்பளிக்கக் கூடியதென்று மன்னர் மன்னர்கள் எண்ணினர். அவருடைய மறைவு கேட்டு மாநிலமே துடிதுடித்தது போல, வேறு எங்கும் எந்தத் தலைவருக்கும் ஏற்பட்டதில்லை. புதிய மார்க்கம் துவக்கிய புத்தர், வீரத்தாலும் பிறகு விவேகத்தாலும் இந்தியாவின் புகழை வளரச்செய்ய அசோகன் பெரிய வல்லரசுகளைக் கட்டி ஆண்ட மன்னர்கள் ஆகியோர் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய நிலை பெற்றனர். மகாத்மாவையோ, மாநிலம் முழுவதும், படித்தவர், பாம்ார், பாராளும் மன்றத்தினர் அனை வரும் அறிந்து கொண்டதுடன், அவர்களின் மனதிலே, அவர் இடம் பெற்றார். சத்தியம், அஹிம்சை எனும் இரு தத்து வங்களை நாடுகொள்ள வேண்டுமென்பதை, அவர் எப்போதும் வலியுறுத்தி வந்தார். அரசியலிலே மோசடிகளும், படு கொலைகளும் நிகழ்த்தபோதும், அவர் மனம் வேதனைப்பட்டதே யன்றி, அவர் அந்த இரு தத்துவங்களை வலியுறுத்தத் தவறவில்லை. கடைசிவரையில் அந்தக் கொள்கையை அவர் கொண்டிருந்தார். நாடு. அந்தக் கொள்கை வழி நிற்க வில்லையே என்ற எண்ணம் அவர் மனதிலே கிளப்பிய வேதனைப்புயல் கொஞ்சமல்ல. கடந்த சில மாதங்களாகவே, இந்த மனவேதனையை அவர் எடுத்துக் கூறிவந்தார். எவரும் இயலாதது என்று எண்ணி, போகத் துணிவு பெறாமல் இருக்கும் இடத்துக்குச் சென்று காரியம் செய்ய அவர் முன் வந்தார். படுகொலைகள் நடைபெற்ற நவகாளி, கல்கத்தாப் பகுதிகளிலே, அவர் கிராமம் கிராமமாக, ஒற்றையடிப் பாதை களிலே, வயல் வரப்புகளின் மீது குக்கிராமங்களுக்கெல்லாம் சென்று நொந்த உள்ளங்களுக்கெல்லாம் ஆறுதல் அளித்தார். மிருகத்தன்மையை மாற்றினார். மக்களிடம் புதியதோர் மனமாறுதலை ஏற்படுத்தினார். ஆபத்து நிரம்பிய இடம், அறி வற்ற மூர்க்கர்கள் உலவிய இடம் என்று பயந்தனர் பலரும் அவருடைய புன்சிரிப்பு அவ்வளவுக்கும் பதிலளித்தது என