பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 உலகப் பெரியார் காந்தி கல்வி பரவ வேண்டும். ஜாதி பேதம் ஒழிய வேண்டும், தீண்டாமை போக வேண்டும். கிராமம் சீர்பட வேண்டும். வறுமை போக வேண்டும். சுரண்டல் முறை ஒழிய வேண்டும். என்ற வேறு பல இலட்சிய முழக்கங்கள் கிளம்பின, மற்ற நாடுகளிலே நடைபெற்ற விடுதலைப் போர் நடந்தபோதும். அதற்குப் பிறகும் உள்ள சூழ்நிலைக்கும், இது ஓர் மகத்தான வித்தியாசம் - இதிலேதான், எதிர்காலத்தை உருவாக்கும் சூட்சமம் இருக்கிறது. சூதாடி ராஜ்யத்தைத் தோற்றுவிட்ட தளன் மீண்டும் ராஜ்யத்தைப் பெற்ற கதைக் காலத்திலிருந்து மகத ராஜ் யத்தை சேதி நாட்டரசன் பிடித்துக்கொண்டான், என்றுள்ள சரிதக் காலம் வரையிலே, ஒரு ராஜ்யம் ஒரு அரசன் கரத்தி லிருந்து வேறோர் அரசனிடம் சிக்கி, மீண்டும், சொந்த அரசு னிடம் வந்து சேரும் சம்பவம், கொடிகள் மாறுவது, அதிகாரி கன் மாறுவது என்ற இவ்விதமாள அளவோடுதான் இருக்கும். ஆனால், இக்காலத்தில், அதிலும் இந்தியாவில், நடைபெற்ற விடுதலைப் போர், கொடி மாற்றமோ, அதிகார மாற்றமோ மட்டும் குறிக்கோளாக அமைந்ததல்ல. தன்னாட்சிமட்டுமல்ல, இலட்சியம் ; அந்தத் தன்னாட்சி மக்களாட்சியாக, அந்த மக்க ளாட்சியும் நல்லாட்சியாக, அந்த நல்லாட்சியும் மக்களுக்குப் புதிய வாழ்வை, முழு வாழ்வைத் தரக்கூடிய ஆட்சியாக அமைதல் வேண்டும் என்ற இவ்வளவு உள்னதமான இலட்சி கத்தையும் உண்டாக்கியதுதான் எனவேதான் இங்கு. விடுதலைப் போரின்போது கிளம்பியது ஒரு முழக்கமல்ல, பல : ஒரே ஒரு குறுகிய இலட்சியமல்ல. பரந்த இலட்சியம். எனவே தான் மறைந்த உத்தமர் அன்னியராகிய வெள்ளையர் நீங்கிய, இந்தியர் அரசான்கிற இந்தியாவைக் காண்பதே இலட்சியம் என்றுமட்டும் கூருமல். பண்டிதர் எடுத்துக் காட்டியதுபோல. எனது