பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் சிந்திய இரத்தம் மகாராஜாக்கள் இருந்தனர் - இன்றும் இருக்கின்றனர். மடாதிபதிகள் இருந்தனர் - இன்றும் இருக்கின்றனர், மாயா ஜாலம், மகேந்திர ஜாலம் தெரியும் என்று கூறிக் கொண்டவர்கள் இருந்தனர் - இன்றும் இருக்கின்றனர், ஆரூடம் கணித்து, இனி இன்னின்னபடி ஆகும் என்று கூறும் ஆற்றல் எமக்குண்டு என்று கூறுபவர்கள் இருந்தனர் ; இன்றும் இருக்கின்றனர். யோகம் தெரீயும், ஆண்டவனைக்காட்ட எம்மால் முடியும், அகிலமெல்லாம் அடக்கிடும் வித்தை தெரியும் என்று பேசினவர்கள் இருந்தனர்- இன்றும் இருக்கின்றனர். அவர்கள் இருந்தனர். என்பது மட்டுமல்ல, நிலைமை.- மகாராஜாக்களுக்கு வரி செலுத்திக்கொண்டு பயபக்தி விசுவாசம் காட்டிக்கொண்டு, மக்கள் இருந்தனர். 44868