பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக உத்தமர் காந்தி 53 அவர் பிறந்தபோது நமதுநாடு, உலகிலே இழிவும்பழியும் தாங்கிய நாடாக இருந்தது அவர் மறைந்திடுவதற்கு மூன்னம், மாஸ்கோவிலிருந்து நியூயார்க்யிலே உள்ள சகல நாடுகளிலும் நமது விடுதலையை விளக்கும் விருது பெற்று, தூதுவர்களும், பிரதிநிதிகளும் வீற்றிருக்கும் நிலை உண்டாக்கிவிட்டது. அவர் பிறந்தபோது உலக மன்றத்திலே, நமக்கு இடம் கிடையாது. இன்று, நாம் இருந்தால் உலக மன்றத்திலே புதியதோர் பலம் என்று பல நாடுகள் எண்ணும் நிலை ஏற் பட்டுவிட்டது. அவர் பிறந்தபோது, இங்கு தேவைப்படும் எந்தச் சாமா னுக்கும், வெளிநாட்டின் தயவை நாடி, ஏங்கிக் கிடந்தோம். இன்று வெளிநாடுகள், நமது சரக்குகளைப் பெற நம்முடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்வதற்குத் தமது ராஜதந்திரத்தை உபயோகிக்கும் அளவு மாறுதலைக் காண்கிறோம். அவர் பிறந்தபோது, கோயில்கள் மூடிக்கிடந்தன. தீண் டாதார் என்று தீயோரால் அழைக்கப்பட்டு வந்த தியாகப் பரம்பரையினருக்கு அவர் கண் மூடுமுன், மூடிக்கிடந்த கோயில்கள் எல்லாம் திறந்துவிடப்பட்டன. குடித்துக் கிடப்பது மிகச் சாதாரணம், சகஜம் என்று யாரும் எண்ணிக்கொண்டிருந்த நாட்கள், அவர் பிறந்த காலம், மதுவிலக்குச் சட்டம் அமுல் நடத்தப்படுவதைக் கண்டான பிறகே, அவர் மறைந்தார்.