பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 உலகப் பெரியார். காந்தி அவர் பிறந்த காலத்திலே, சூரியனே அஸ்தமிக்க அஞ்சும் படியான அளவுள்ளதாக இருந்தது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம். அந்த சாம்ராஜ்யத்தின் ஆதிக்கப் போக்கு அழிந்ததைக் கண் டான பிறகே, அவர் கண்களை மூடினார். அவர் பிறந்த நாட்களிலே, பிரிட்டனிலிருந்து, சுவர்னர் களும் மற்ற அதிகாரிகளும் இங்கு வந்தவண்ணம் இருந்தனர். ஆள்வதற்கு அடிமை இந்தியாவை, வீட்டு வெளியே அவர் கள் போகும் காட்சியைப் பார்த்துவிட்ட பிறகே, உத்தமர் உயிர்நீத்தார் இவ்வளவையும், அவர் மந்திரக்கோல் கொண்டோ, யாக குண்டத்தருகே நின்றே சாதிக்கவில்லை மக்களிடையே வாழ்ந்து மக்களின் மகத்தான சக்தியைத் திரட்டிக் காட்டிச் சாதித்தார்; புதிய வாழ்வு தந்தார்; புதிய அந்தஸ்து தந்தார். இவ்வளவு தந்தவருக்கு, அந்தத் துரோகி தந்தது, மூன்று குண்டுகள், சாக்ரடீசுக்கு விஷம் தந்ததுபோல. அவர் சாதித்தவைகள் மகத்தாளவை; ஆனால் அவர் சாதிக்க எண்ணியிருந்தவை, வேறுபல ; அவை மேலும் மகத் தானவை. நாட்டிலே உள்ள மற்றக் கொடுமைகள் ஜாதிச் சனியன், வறுமை, அறியாமை ஆகியவற்றை அடியோடு களைத்தெரிந்து விட்டு உலகத்தினர் கண்டு பின்பற்றத்தக்க முறையிலே, உன்னதமான இலட்சியங்களைக் கொண்ட ஓர் சமுதாயத்தைக்