பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 உலக உத்தமர் காந்தி நாட்டு மக்களிடம் நம்பிக்கை ஊட்டினார்; அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார்; நானிலத்தின் நன்மதிப்பைப் பரிசாகப் பெற்றார். 'முடியுமா?' என்ற சந்தேகத்தை அவர் விரட்டினார். நாடு விடுதலை பெறவேண்டுமா, அல்லவா? என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டார்; ஆம் என்றது அவருடைய தூய்மையான உள்ளம் - உள்ளம் உரைத்ததை ஊராருக்கு அறிவித்தார் ஊரார் சந்தேகமும் பயமும் கொண்டனர். விடுதலை வேண்டும், நாடு மீளவும், கேடு தீரவும், தாம் இனி மனிதராய் வாழவும், கட்டாயமாக விடுதலை வேண்டும்; ஆனால் நம்மால் முடியுமா? என்று கேட்டனர். விடுதலை வேண்டும் என்று மனம் கட்டளையிட்டுவிட்ட பிறகு மறு கேள்வி ஏது ? அவர் கேட்டார். 'அவர்கள் பலசாலிகள்' மக்கள் கூறினர். 'நாம் பலம் பெறவேண்டும். பெறுவோம்' உரைத்தார், உறுதியுடன். அவர் சிறையிலே தள்ளுளார்களே ' பயத்துடன் கூறினர் மக்கள். > 'தள்ளுவர் - ஆனால் இப்போது உள்ள இடமும் சிறை தான், இது பெரிய சிறை அவர் பதில் சொன்னார், நகைச் சுவையுடன். தடியடி, துப்பாக்கி, தூக்குமேடை, அந்தமான் தீவு என்பன போன்ற எத்தனையோ ஆபத்துகள் அடுத்தடுத்து