பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக உத்தமர் காந்தி 63 அவர் செய்து வந்த பணியை, நான் மேற்கொள்வேன் என்று. கூறி அதை நடைமுறையில் கொள்வது ஆற்றலேயாகும். மறைந்த உத்தமர், மத ஆதிக்க வெறியால் கொல்லப்பட்டார். அந்தக் கொடும் பாம்பை, ஒழித்தாக வேண்டும் அவர், அனை வரும் ஒன்று எனும் அன்பு மார்க்கக் கருத்தை தூவிவந்தார். அதை நாம் செய்து முடிப்போம் என்பதே நமது உறுதியாக இருக்கவேண்டும். புத்தர் காலத்திலே நடந்தேறியதுபோல புதிய வழியைக் கொள்வோம் என்ற உறுதிகொண்டு உழைப்பதே, நாம் அந்த உத்தமருக்கு எழுப்பக்கூடிய நிலையான ஞாபகச்சின்னம்.