பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக அநுபவம் வீடுதோறும் மண் அடுப்பு உண்டு. -இந்தியா மனிதன் நனைந்தாலொழியக் குடிசை கட்ட மாட்டான்: தலையில் தட்டி வீங்கின. லொழியக் குனிய மாட்டான். -இந்தியா மரத்திலே பானை செய்தால், ஒரு முறைதான் சமைக்கலாம். -இந்தியா உலகம் யானைக்கே உதவி செய்யும், எறும்பை மிதித்து நசுக்கி விடும். -இந்தியா ki ஒவ்வொரு நிமிடமும் உலகை உற்றுப் பார்த்தால், எவர்களைப் பாராட்டுவது, எவர்களிடம் துக்கம் விசாரிப்பது. -இந்தியா நீ ரொட்டியுடன் சர்க்கரை சேர்த்து உண்ண வேண்டுமானல் உலகைப் புகழ்ந்து பேசு. -இந்தியா பாதிக் கோழியை கறிவைத்து, பாதியை முட்டையிட வைத்துக் கொள்ள முடியாது. -இந்தியா

  • -

நண்பனை வறுமையில் அறியலாம், வீரனைப் போரில் அறியலாம், யோக்கியனைக் கடனில் அறியலாம், மனைவியைச் செல்வமிழந்த நிலையில் அறியலாம், பந்துவை இடுக்கண் வருங்கால் அறிலாம். -இந்தியா நாவிதரில் பழையவன், வண்ணுரில் புதியவன். -இந்தியா பத்து மனிதர்-பத்து நிறம். -ஜப்பான் மூடு பனியை விசிறியால் விரட்ட முடியாது. -ஜப்பான் கற்கள் மிதக்கும்பொழுது, இலைகள் அழிந்துவிடும். -ஜப்பான் திறமையுள்ள நீக்சல்காரர்கள் நீரிலே மடிவார்கள்; திறமை யுடன் சவாரி செய்பவர்கள் வேட்டையிலே மடிவார்கள். -ஜப்பான் பத்து நாளில் சூடாக்கியது ஒரே நாளில் குளிர்ந்து விடும். -ஜப்பான்