இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
“மேல் ஏழு உலகங்களின் பெயர் என்னடா?”
இது செவிட்டு வாத்தியாரின் கேள்வி. உடனே நான் உரக்கக் கத்துவேன்.
‘பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், ஜனோலோகம், தபோலோகம், சத்திய லோகம், சுவர்க்கலோகம்.’
‘கீழ் ஏழு உலகங்களின் பெயர்’- இது செவிட்டு வாத்தியாரின் இரண்டாவது கேள்வி.
உடனே நான் உரக்கக் கத்துவேன்.
‘அதல, விதல, சுதல, தராதல, மகாதல, ரசாதல, பாதாள...’
‘பூமிக்கு மேலே, பூமியையும் சேர்த்து ஏழு உலகம். கீழே ஏழு உலகம். தெரிந்ததா?’ என்று உறுமுவார் செவிட்டு வாத்தியார்.
செவிட்டு வாத்தியார் சொல்லிக் கொடுத்த மாகாணி, இம்மாகாணி, முந்திரி வாய்ப்பாடு என் மண்டையில் ஏறவில்லை.
ஆனால் அந்தப் பதினான்கு உலகங்களும் என் மனம் விட்டு அகலவில்லை.