பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

'வழி இருக்கு.'

'ஏன் நம்ம கண்ணுக்குத் தெரியல்லே.'

‘தெரியாது.'

‘நம்ம தாத்தா பாட்டி எல்லாரும் அங்கே தானே இருக்கா?'

'ஆமாண்டா '

'மேலே எப்படி அப்பா அவா இருக்கா. கீழே விழுந்துவிட மாட்டாளோ'

'விழாமாட்டா'

'சொர்க்கத்துக்குப் போனவர் . திரும்பி வரமாட்டாரா அப்பா.'

'வர மாட்டார்.'

'ஏன் அப்பா! போன வழியாவே இறங்கி வரக் கூடாதோ .'

தந்தையார் பதில் சொல்லவில்லை.

'அப்பா!'

‘தூங்குடா.'

நான் தூங்கிவிடுவேன். ஆனால் என் உள்ளத்திலே தோன்றிய எண்ணங்கள் - ஐயப்பாடுகள் - அலைகள் - தூங்கினால் தானே! மறு நாளும் இதே போன்ற கேள்விதான்.