பக்கம்:உலகியல் நூறு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii இந்நூலுக்குரிய ஆய்வு முன்னுரை ஒன்று, என் மருகரும் வழக்குரைஞரும், சொல்லாய்வறிஞரும் ஆகிய தமிழுர் ப. அருளி அவர்களால் எழுதப் பெற்று இத்துடன் இணக்கப் பெற்றுள்ளது. நூலின் சிறப்புக்கு அது மகுடமிடுகிறது. அவர்க்கு என் நன்றியும் வாழ்த்தும் உரியவாகுக. இந்நூலுக்கான முதற்சீர் அகரவரிசையையும் அருஞ் சொற்பொருள் அகரவரிசை'யையும் தொகுத்துதவிய நெய்வேலி தென்மொழி சுப. திருமாறன் அவர்களும், அவர்க்குத் துணை நின்ற என் மகன் மா. பூங்குன்றன் அவர்களும், பிழைதிருத்தப் பட்டியல் எடுத்துதவிய தென்மொழி செ. கண்னன் அவர்களும் என் அன்புக்கும் நன்றிக்கும் உரியராவர். . இந்நூலே அழகிய முறையில் அச்சிட்ட, புன்செய்ப் புளியம்பட்டி அச்சக உரிமையாளர் திரு. ஆடலரசஞர்க்கும், முகப்போவியம் வரைந்துதவிய ஓவிய அறிஞர் திரு. ப. அறவாழிக்கும் என் அன்பு கலந்த நன்றியும் வாழ்த்தும் ! அன்புநிறை மடங்கல் ச, தி. பி. உoகங் . . 29-8-1982, சென்னை.5. பெருஞ்சித்திரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/9&oldid=758262" இலிருந்து மீள்விக்கப்பட்டது