30
J ()
இவர் பாரதத்தில் காங்கிரஸ் அக்கிராசனராகவும் விளங்கினர்.
இவரே முதன் முதலாக காங்கிரசுக்கு ஒரு கொடியையும் கொடுத்தார்.
இந்து, முஸ்லீம் ஆகிய இருவருக்கும் பயன் தரும் வகையில் சிவப்பு, பச்சை நிறங்களைக் கொண்டிருந்தது அக் கொடி. நடுவே வெள்ளை, அதன் மையத்தில் சர்க்காராட்டையும் இருந்தது.
அன்ஞரது இந்திய நாட்டுப் பணியை சரித்திரம் என் றென்றும் மறக்காது; மறக்க முடியாது. அவர் நினைவுக்குத் தபால் தலைகளை வெளியிட்டுக் கவுரவித்தது நம் அரசாங்கம்,
அந்த மேலைநாட்டுப் பெண் திலகம்தான் அன்னி பெஸண்ட் அம்மையார்!
நிழற்பட நேரு
பாரதப் பிரதமர் நேருஜியும் ஆஸ்திரேலியப் பிரதமர் ராபர்ட் பென்விஸ்லரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். ‘இந்த உலகத்திலேயே அதிகமாகப் படம் பிடிக்கப் படுபவர் தாங்கள் ஒருவர்தான். உங்கள் போட்டோ இல்லாத பத்திரிகையே_கிடையாது. உங்கள் படத்தை நீங்களே பார்த்துத் தற்பெருமை அடைகிறீர்கள்’ என்று சொன்னர், ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர்.
இதைக் கேட்டுவிட்டுப் புன்னகையுடன் பதில் தெரிவித் தார் ஜவாஹர்லால் அவர்கள்.
- உங்கள் எண்ணம் சரியல்ல. உங்கள் நாடு மிகவும் முன்னேற்றம் அடைந்த நாடு, படித்தவர்கள் மிகுதி. ஆகவே, | ங்கள் நாட்டுக்காகச் செய்யும் சேவைகளை அவர்கள் பத்திரிகைகளில் படித்துத் தெரிந்து கொள்கிரு.ர்கள். ஆனல் இங்கே எங்கள் நாட்டில் பெரும்பாலோருக்கு எழுத்தறிவு இல்லை. நான் அவர்களுக்காகச் செய்து வரும் சேவைகளைப் பற்றியும் நாடு அடைந்து வரும் முன்னேற்றம் பற்றியும் அவர்கள் பத்திரிகைகளில் படித்து அறிந்து கொள்ள முடியாது. ஆதனுல்தான், அனேக்கட்டைத் தி ற ந் து வ்ைப்பது, கிராமங்களைப் பார் ப் ப து, அவர்களுடன் நெருங்கிப் பேசுவது என்று இப்படிப் பல நிகழ்ச்சிகளுக்கு நான் போஸ் கொடுக்கிறேன். என் படங்களைப் பார்த்துத் .. அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும். அப்புறம் --- அவர்கட்காகச் செய்யும் பணிகளிலும் கடமை ‘லும் அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும். பிறகுதான்