37
37
நிறையப் புத்தகங்கள் வெளிவந்தன வென்று டாக்டர் எஸ். ஏ. டானென்பாம் எழுதுகிரு.ர். இவரும் ஷேக்ஸ் பியரின் விமரிசர்களிலே ஒருவர்; குறிப்பிடத் தகுந்தவர்!
சிறுமியே குரு
உலகப் பேரறிஞர் ஈன்ஸ்டீனத் தேடிக் கொண்டு பள்ளிச் சிறுமி ஒருத்தி அவரது 112-ம் எண் இல்லத்துக்கு ஒடி வந்தாள். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் போட்ட வீட்டுக் கணக்கைச் செய்து தரச் சொன்னுள்; அவ்வாறே கணக்குக்கு விடை கண்டு சொல்லிக் கொடுத்தார். இந்நிகழ்ச்சியைத் தன் தாயிடம் போய்ச் சொன்னுள் இமி.
சிறுமியின் அன்னை விவரம் அறிந்து துடித்தாள்.
விஞ்ஞான மேதையின் பொன்னை பொழுதை வீணடித்து விட்டிருக்கிருளே தன் மகள் என்று வருந்தி அப்பெரியாரிடம் மன்னிப்பு வேண்டினுள். -
‘ க்கள் மகள் என்னிடமிருந்து கற்றுக் கொண்டதைப் பார்க்கிலும், நான் அவளிடமிருந்து கற்றுக் கொண்டதே அதிகம்!” என்றார் அப்பெரியார்!
காஷ்மீர் நிலை
மறக்க முடியாததொரு சம்பவம்:
இந்தியப் பிரதமர் நேருஜியும் பாகிஸ்தான் பிரதமரான அயுப்கானும் புதுடில்லியில் விமான நிலையத்திலேயே ஒர் அறையில் உரையாடினர். - -
நேருஜி ஒர் ஆப்பிளை எடுத்து அயூப்கானிடம் கொடுத் தார். - - - - - -
அயூப் உடனே ஒரு கத்தியை எடுத்து ஆப்பிளேச் சுட்டிக் காட்டி, ‘இது காஷ்மீர்!’ என்று கூறி, அதை வெட்டி ஒரு துண்டத்தை நேருஜியிடம் நீட்டினர். . -
காஷ்மீரைப் பிளவுபடுத்த வேண்டுமென்ற வெறிக்கு, சூசகமா அச்சம்பவம்? . . . .
ஆப்பிள் சரிவர வெட்டப்படாததால், நேருவிடம் இருந்த ஆப்பிள் கொஞ்சம் பெரிதாக இருந்தது. அயூப்கா னிடம் இருந்தது சிறிதாகக் காணப்பட்டது. ‘இன்றைய நிலையைச் சொல்கிறீர்களா?” என்று வினவினர் நேருஜி. . . . . . . . .
காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் பிடித்துவைத்
திருந்த பழைய நிகழ்ச்சியைத்தான் அன்று நேருஜி அப்படிக் குறித்தார்!