பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

நாம் அன்றுடம் பத்திரிகைகளிலும், தலைவர்கள் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளிலும் எத் துணை யோ விந்தையான, உன்னதமான நிகழ்ச்சி களைப் படிக்கிருேம்; பார்த்து, கேட்டு அனுபவிக்

கிருேம். - *

ஆனல், எல்லா நிகழ்ச்சிகளும் நமக்கு விந்தை யாக, உன்னதமாக இருப்பதும் அல்ல, நம் மனத் தில் நின்று நிலை பெறுவதும் அல்ல.

காந்திஜி, பண்டிட்ஜீ, பெர்னட்ஷா, லெனின், பேரறிஞர் அண்ணு, டாக்டர் கலைஞர் முதலான இன்னும் அநேக உலக தலைவர்களால் சொல்லப் .ெ ப ற் ற, நிகழ்த்தப்பெற்ற, சம்பவங்களைத் தொகுத்து இதன் ஆசிரியர், பூவை. எஸ். ஆறுமுகம் அவர்கள் புத்தக உருவில் தந்திருப்பது மக்களுக்கு நன்மை பயப்பதாகும்.

இதில் கூறப்பட் டிருக்கும் சேம்பவக் கோர்வை களைப் படிக்குங்கால், உலகப் பெருந் தலைவர்களின் நிகழ்ச்சிகளில் ஒன்றி, மறக்க முடியாத இன்பத்தில் திளைக்கிருேம்.

அறிவு வளர, இன்பம் துய்க்க, உலகத் தலைவர் கரின் நகைச்சுவையை அனுபவிக்க மக்களுக்கு உறு துணையான நூல் இது என்றால் மிகையில்லை.

ஆசிரியரவர்களுக்கு நன்றி.

சென்னை-14. 10–5-1972

வாசு பிரசுரத்தார்.