பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

# 7

உடனே ஐயரவர்கள், போதுமானது” என்று சொல்வி விடை பெற்றுக் கொண்டார்கள். நேரம் ஆயிற்று, பேசினது போதுமானது என்ற இர ண் டு பொருளும் அதில் தொனித்தன. -

பேரீச்சம் பழம்

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஒரு சொற் பொழிவு ஆற்றினர். அதற்கு முன், அவருக்கு ஸ்டீல் என்னும்

பண்மணி நேர்த்தியான விருந்தளித்தாள்.

சுவாமிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் விருந்துண்டார். உண்ணுமுன் வழக்கம்போல கடவுளுக்கு நன்றி சொல்லுவார் என்று அந்த அம்மணி எதிர்பார்த்தாள். ஆனுல் அவர் அப்படிச் செய்யவில்லை.

அதிசயப்பட்ட அம்மணிக்குச் சமாதானம் ്.ഈ எண்ணினர் சுவாமிஜி, உண்ணுமுன் நன்றி கூறுவதை விட், உண்டபின் நன்றி கூறுவதே முக்கியம். அம்மா, உங்களுக்கு. நான் நன்றி கூறுகிறேன். நீங்களே எல்லா வேலைகளையும் செய்து விருந்தும் தயாரித்தீர்கள்’ என்றார் அடிகள்.

விருந்து முடிந்தது. சுவைமிக்க பேரீச்சம் பழங்களையும் அந்த அம்மாள் அளித்தாள்,

அவற்றையும் உண்டார் சுவாமிகள், களிப்புற்றுர், சொற்பொழிவு முடிந்ததும், சொற்பொழிவைப் பற்றி அந்த, அம்மணி பெரிதும் புகழ்ந்தாள்.

‘அதற்கும் உங்களது பேரீச்சம் பழங்கள்தாம் காரணம். மீண்டும் நான் உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன்’ என்றார் சுவாமிகள். -

அந்த அம்மணி மெய்சிலிர்த்தாள்!

மேதைகள் சந்திப்பு நிலையம்

ஒரு சமயம்: கோயமுத்தார் ரயில் சந்திப்பு நிலையத்தில் ஜி. டி. நாயுடு பிரயா ண ம் செய்வதற்காக வந்தார். அப்போது, பெரியார் ஈ. வே. ரா. அவர்கள் மூன்றும் வகுப்புப் பெட்டியில் உட்கார்ந்திருந்ததைக் கண்டார். உடனே அவரிடம் சென்று, பயணத்தினைப் பற்றி விசாரித் தார். அவர் செல்ல வேண்டிய இடத்துக்கான முதல் வகுப்பு டிக்கெட்டை அவரிடம் கொடுத்து விட்டு, தம்முட்ன் வ்ந்து உட்காரும்படி கேட்டுக் கொண்டார். நாயுடு முன்ஞல் சென்றார். & ‘ ・ ・・; . . ... - . . .