48
48
ஆளுல், வண்டி புறப்பட்டும்கூட பெரியாரைக் காண வில்லை.
சென்னை சென்ட்ரலில்தான் பெரியாரை நாயுடு சந்திக்க முடிந்தது. ஏன் முதல் வகுப்பில் பிரயாணம் செய்ய வில்லை?” என்று கேட்டார் நாயுடு.
‘வீண் பண விரயம் ஏன் என்று இருந்து விட்டேன். உங்கள் டிக்கட்டை அப்போதே பணமாக மாற்றிக் கொண்டு விட்டேனே’ என்றார் பெரியார்.
தொழில் மேதை தம்மையும் மறந்து சிரித்தார்.
பாரத சந்தி
சென்னையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயிலேற பாரதி யார் வந்திருந்தார். ஏதோ ஞாபகத்தில், காலை நடை பாதையை அடுத்த பள்ளத்தில் வைக்க, சறுக்கி விழுந்து விட்டார்.
பலர் பாரதியாரைத் துக்க ஓடி வந்தார்கள். ‘என்னை யாரும் தூக்க வேண்டாம். இந்தப் புண்ணிய மண்ணில்-பாரத நாட்டின்-என் தாய் மண்ணில் புரள எவ்வளவோ பாக்கியம் செய்திருக்க வேண்டும் ஐயா! மகான் களும் மேதைகளும் வாழ்ந்த நாடு இது!’ என்று சொல்லி எழுந்து நடைமேடையிலும் நீண்ட பொழுதுவரை புரண் டார் பாரதியார். - - -
அவர் எழுந்த பிறகுதான் ரயில் கிளம்பியது. ஆம்; காலத்தை வென்ற மகாகவி ஆயிற்றே!
பாம்பே பாம்பு!
சில ஆண்டுகளுக்கு முன்னர் சங்கீத விற்பன்னர் செம்பை வைத்தியநாத பாகவதரின் கச்சேரி பம்பாய் நகரத்தில் நடை பெற்றது. & -
அச்சமயம், அவர் தமது பாடல்களில் பலபல புண்ணிய ஸ்தலங்களையெல்லாம் இணைத்துப் பாடினர்.
ஒர் அன்பர் குறுக்கிட்டார். ஐயா, எங்கள் பாம்பேயை பும் உங்கள் பாட்டில் வைத்துப் பாடுங்களேன்’ என்றார்,
‘ஆகட்டுமே!’ என்று இணங்கினர் பாடகர். உடனே, சஆடு ப்ாம்பே’ என்று பாடினர். தொடர்ந்து விளையாடு பாம்பே’ என்று பாடினர். பாம்பே'யில் இப்போது ஓர்
த்தம் கொடுத்துப் பாடினர். கூட்டம் பாம்பே'யின் உயர்வு கண்டு கரவொலி எழுப்