பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நிதியும் நீதியும்

நான் உலகம் சுற்றும் தமிழன். எனவேதான், உலக அரங்கின் பழைய கதைகளும், புதிய கதைகளும் எனக்கு அத்துபடியாக விளங்குகின்றன. இவ்வினிய அனுபவங்களுக்கு எனக்குப் பத்திரிகைப் பணிதான் நிரம்பவும் கைகொடுத்தது. இல்லையென்றால், இத்தனை அருமையான நிகழ்ச்சிகளையும் காலத்தின் சரித்திரப் பொன்னேடுகளினின்றும் தொகுத்தளித்திருக்க முடியுமா?

இவ்வகையில், நூலகங்களே எனக்குப் பெரிதும் உதவின. அவற்றைப் பேட்டி கண்டதன் வாயிலாக இந்த விந்தைத் தொகுப்பு எனக்குக் கிடைத்தது.

உங்களுக்கு ஒரு நிதி கிடைத்தது. இருந்த இடத்தில் இருந்து கொண்டே, உலகத்தைக் கவர்ந்த உன்னதப் பெரியோர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த உன்னத நிகழ்வுகளைப் பற்றி அறிந்து, சிரித்து, மகிழ ஓர் அரிய வாய்ப்பு உங்கட்குக் கிடைத்திருக்கிறதல்லவா ? நீதி நல்கும். சம்பவங்கள் ஆயிற்றே!

அனைவருக்கும் நன்றி.

சென்னை

10-5-1972 

பூவை எஸ். ஆறுமுகம்