இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
120
உலக அறிஞர்களின்
பெறுவது போலவே கொடுக்கவும் வெண்டும் சந்தோஷமாய், விரைவாய், தயக்கமின்றிக், கையைவிட்டுக் கிளம்பாத கொடையால் பயனில்லை.
-ஸெனீக்கா
பிறர்க்கு வழங்கியதை மறத்தல் பெருந்தன்மை பேசும்.
-காங்க்ரீவ்
ஈதலாகிய ஆடம்பரத்தை அறிய ஏழையாயிருத்தல் வேண்டும்.
-ஜார்ஜ் எலியட்
கையில் வைத்துக்கொண்டே இன்று போய் நாளைவா என்று கூறாதே.
-விவிலியம்
பெரிய கொடையேயாகிலும் அன்பின்றிக் கொடுத்தால் கொடையாகாமல் தேய்ந்து போகும்.
-ஷேக்ஸ்பியர்
★ ★ ★
47. மனத்திருப்தி
ரோஜாச் செடியில் முள் இருப்பதற்கு வருந்தாதே. முட்செடியில் மலர் இருப்பதற்கு மகிழ்வாய்.
-ஆவ்பரி
மனம் கொண்டது மாளிகை, நரகத்தைச் சொர்க்க மாக்குவதும் சொர்க்கத்தை நரகமாக்குவதும் அதுவே.
-மில்டன்
விருப்பத்திற்குக் குறைவாய்ப் பெறுபவன் தகுதிக்கு அதிகமாய்ப் பெறுவதாக அறியக் கடவன்.
-ஷோபனார்
உயர்ந்த சிலரோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதினும் தாழ்ந்த பலரோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதே நலம்.
-ஜாண்ஸன்