பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

23


ஓடைகள் சேர்ந்து நதிகள், நதிகள் சேர்ந்து கடல். அதுபோலவே தீய வழக்கங்கள் அறியா அளவாகக் கூடி வளர்ந்துவிடும்.

- ட்ரைடன்

உடல் துன்பம், மனச்சான்றின் பச்சர்த்தாபம் இவ்விரண்டும் தவிர இதர துன்பங்கள் எல்லாம் வெறுங்கற்பனைகளே, உண்மையானவை அல்ல.

-ரூஸோ

நல்ல சேவை செய்வதற்கு உரிய ஆற்றலைக் கெட்ட மனிதனிடம் ஒருநாளும் காண முடியாது.

-பர்க்

அநேகர் தங்கள் காலத்தில் பெரும் பாகத்தைப் பிறரை அவலத்திற்கு உள்ளாக்குவதிலேயே கழிக்கின்றனர்.

-லாபுரூயர்

கயவர் முட்டாள்களின் நாட்டில் பட்டினியாய் இருப்பதில்லை.

-சர்ச்சில்

★★★


4. வாய்மை

உண்மையே ஞானத்தின் உறைவிடம்.

-பழமொழி

உண்மை உரைத்துச் சாத்தானை நாணமடையச் செய்க.

-ராபிலே

கடவுள் சிருஷ்டிகளின் தலைசிறந்தது சத்திய வந்தனே,

-போப்

உயர்ந்த உண்மை மலர்வது ஆழ்ந்த அன்பிலேயே.

-ஹீன்