இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
23
ஓடைகள் சேர்ந்து நதிகள், நதிகள் சேர்ந்து கடல். அதுபோலவே தீய வழக்கங்கள் அறியா அளவாகக் கூடி வளர்ந்துவிடும்.
- ட்ரைடன்
உடல் துன்பம், மனச்சான்றின் பச்சர்த்தாபம் இவ்விரண்டும் தவிர இதர துன்பங்கள் எல்லாம் வெறுங்கற்பனைகளே, உண்மையானவை அல்ல.
-ரூஸோ
நல்ல சேவை செய்வதற்கு உரிய ஆற்றலைக் கெட்ட மனிதனிடம் ஒருநாளும் காண முடியாது.
-பர்க்
அநேகர் தங்கள் காலத்தில் பெரும் பாகத்தைப் பிறரை அவலத்திற்கு உள்ளாக்குவதிலேயே கழிக்கின்றனர்.
-லாபுரூயர்
கயவர் முட்டாள்களின் நாட்டில் பட்டினியாய் இருப்பதில்லை.
-சர்ச்சில்
★★★
4. வாய்மை
உண்மையே ஞானத்தின் உறைவிடம்.
-பழமொழி
உண்மை உரைத்துச் சாத்தானை நாணமடையச் செய்க.
-ராபிலே
கடவுள் சிருஷ்டிகளின் தலைசிறந்தது சத்திய வந்தனே,
-போப்
உயர்ந்த உண்மை மலர்வது ஆழ்ந்த அன்பிலேயே.
-ஹீன்