இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
39
நரகத்திற்குள்ள வழி எளிது, கண்களை மூடிக்கொண்டே போகலாம்.
-பியன்
நான் நரகம் உண்டென்று நம்ப மட்டும் செய்யவில்லை. நரகம் உண்டென்று அறியவும் செய்பவன். அது மட்டுமா? நரகத்துக்கு அஞ்சி அறநெறி நிற்பவர் யாவரும் நரகத்தில் கால் வைத்துவிட்டவரே என்பதையும் அறிவேன்.
-ரஸ்கின்
சாஸ்திரிகளும், சாவோரும் நரகத்தைப்பற்றிப் பேசட்டும். ஆனால் நரக வேதனைகள் எல்லாம் என் இதயத்திலேயே உள்ளவை.
-ஷேக்ஸ்பியர்
9. மதம்
நூறு விதமாய்க் கூறினாலும் மதம் ஒன்று தான் உண்டு.
-பெர்னார்ட் ஷா
உலகமே என் தேசம், நன்மை செய்வதே என் சமயம்.
-தாமஸ் பெய்ன்
மனிதர் அனைவருக்கும் மதமாகிய கடிவாளம் தேவை. 'மரணத்திற்குப்பின் யாதோ?’ என்னும் பயமே மதம்.
-ஜார்ஜ் எலியட்
அவனியிலுள்ள சமயங்களில் அறத்தாறு உய்ப்பது ஒன்றே உண்மைச் சமயம்.
-ஸவனரோலா
நம்மிடம் பகைப்பதற்குப் போதுமான சமய உணர்ச்சி உளது. ஆனால் அன்பு செய்வதற்குப் போதுமான அளவு இல்லை.
-ஸ்விப்ட்