பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

39


நரகத்திற்குள்ள வழி எளிது, கண்களை மூடிக்கொண்டே போகலாம்.

-பியன்

நான் நரகம் உண்டென்று நம்ப மட்டும் செய்யவில்லை. நரகம் உண்டென்று அறியவும் செய்பவன். அது மட்டுமா? நரகத்துக்கு அஞ்சி அறநெறி நிற்பவர் யாவரும் நரகத்தில் கால் வைத்துவிட்டவரே என்பதையும் அறிவேன்.

-ரஸ்கின்

சாஸ்திரிகளும், சாவோரும் நரகத்தைப்பற்றிப் பேசட்டும். ஆனால் நரக வேதனைகள் எல்லாம் என் இதயத்திலேயே உள்ளவை.

-ஷேக்ஸ்பியர்


9. மதம்

நூறு விதமாய்க் கூறினாலும் மதம் ஒன்று தான் உண்டு.

-பெர்னார்ட் ஷா

உலகமே என் தேசம், நன்மை செய்வதே என் சமயம்.

-தாமஸ் பெய்ன்

மனிதர் அனைவருக்கும் மதமாகிய கடிவாளம் தேவை. 'மரணத்திற்குப்பின் யாதோ?’ என்னும் பயமே மதம்.

-ஜார்ஜ் எலியட்

அவனியிலுள்ள சமயங்களில் அறத்தாறு உய்ப்பது ஒன்றே உண்மைச் சமயம்.

-ஸவனரோலா

நம்மிடம் பகைப்பதற்குப் போதுமான சமய உணர்ச்சி உளது. ஆனால் அன்பு செய்வதற்குப் போதுமான அளவு இல்லை.

-ஸ்விப்ட்