இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
68
உலக அறிஞர்களின்
தானே செய்யக்கூடியது எதையும் பிறர் செய்ய விடலாகாது.
-இப்ஸன்
★ ★ ★
18. துறவு
இந்த உலகில் மூன்று விதத் துறவுகள்:- அறிவையும் இன்பத்தையும் சமயத்துக்காக வெறுத்தால் சமயத்துறவு; அதிகாரத்துக்காக வெறுத்தால் போர்த்துறவு பணத்துக்காக வெறுத்தால் பணத்துறவு. இக்காலத்தில் காணப்படும் துறவு மூன்றாவதே.
-ரஸ்கின்
எனக்குத் துறவறத்தில் நம்பிக்கை இல்லை. ரோஜாச்செடியில் முட்களைப் போல் மலரும் அவசியமானதே. கடவுள் உடலை உண்டாக்கிய பொழுது அனாவசியமானது எதையும் அமைத்து விடவில்லை.
-பார்க்கர்
★ ★ ★
19. தனிமை
உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒருபொழுதும் தன்னித்தவராகார்.
-ஸ்ர்பிலிப் ஸிட்னி
கொள்கை உறுதியாயிருப்பின் தனிமையாயிருப்பது தனிமையாகாது.
-அனர்பாஷ்
தன்னந் தனியாய் நிற்பவனைவிட அதிகச் சக்தி வாய்ந்தவன் உலகில் கிடையாது.
-இப்ஸன்