பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

உலக அறிஞர்களின்


கருணை காட்டுபவன் எப்போதும் வெற்றி காண்பான்.

- ஷெரிடன்

தீயோர் கருணையையும், பேராசைக்காரர் வண்மையையும், கர்விகள் பணிவையும் விரும்புவர் - பிறரிடத்தில்.

-கோல்டன்

கடவுளின் பிரதம லட்சணம் கருணையே.

-பிளச்சர்

கோழைகள் குரூரமாய் நடப்பர் வீரர்கள் கருணை உடையவர்.

-ஜான்கே

இனிய கருணையே பெருந்தன்மையின் அடையாளமாகும்.

-ஷேக்ஸ்பியர்

★ ★ ★


22. வணக்கம்

உயர்ந்ததினிடம் உண்டாகும் பக்தியிலும் உயர்ந்த உணர்ச்சி கிடையாது.

-கார்லைல்

வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம்.

-கோல்ரிட்ஜ்

மக்கள் அனைவரும் பக்தர்களே. சிலர் புகழையும் பலர் பெரும்பாலோர் சுகத்தையும் வணங்குவர்.

- கிரீஷியன்

அன்பும் நம்பிக்கையும் உடையவரே ஆண்டவனை வணங்குபவர்.

-அகஸ்டைன் ஞானி

★ ★ ★