இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
72
உலக அறிஞர்களின்
கருணை காட்டுபவன் எப்போதும் வெற்றி காண்பான்.
- ஷெரிடன்
தீயோர் கருணையையும், பேராசைக்காரர் வண்மையையும், கர்விகள் பணிவையும் விரும்புவர் - பிறரிடத்தில்.
-கோல்டன்
கடவுளின் பிரதம லட்சணம் கருணையே.
-பிளச்சர்
கோழைகள் குரூரமாய் நடப்பர் வீரர்கள் கருணை உடையவர்.
-ஜான்கே
இனிய கருணையே பெருந்தன்மையின் அடையாளமாகும்.
-ஷேக்ஸ்பியர்
★ ★ ★
22. வணக்கம்
உயர்ந்ததினிடம் உண்டாகும் பக்தியிலும் உயர்ந்த உணர்ச்சி கிடையாது.
-கார்லைல்
வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம்.
-கோல்ரிட்ஜ்
மக்கள் அனைவரும் பக்தர்களே. சிலர் புகழையும் பலர் பெரும்பாலோர் சுகத்தையும் வணங்குவர்.
- கிரீஷியன்
அன்பும் நம்பிக்கையும் உடையவரே ஆண்டவனை வணங்குபவர்.
-அகஸ்டைன் ஞானி
★ ★ ★