இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
77
எல்லோரிலும் யாரை எளிதாக ஏமாற்ற முடியும்? தன்னைத்தான்.
-புல்வெல் லிட்டன்
உயர்ந்தோர் தோஷங்களாலேயே உருப்பெற்றவர் என்பர்.
-ஷேக்ஸ்பியர்
ஏமாற்றிப் பழக ஆரம்பிக்கும்பொழுது எவ்வளவு தூரம் நம்பக்கூடிய பொய்களைச் சொல்லத் தெரியாமல் திண்டாடுகிறோம்!
-ஸ்காட்
தீயொழுக்கம் நல்லொழுக்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு நாம் அறியாமலே நம்மிடம் குடி புகுந்துவிடும்.
-ஸெனீக்கா
என்ன அழகான பழம்-இதனுள்ளே அழுகல்-பொய் எவ்வளவு அழகாய் வேஷம் போட்டுக் கொள்கிறது
-ஷேக்ஸ்பியர்
வஞ்சக நடையுள்ளவன் இயற்கையான அயோக்கியத் தனம், செயற்கையான ஏமாற்றுக்குணம் ஆகிய இரண்டு சரக்குகளைக் கொண்டு செய்து தங்க நிறம் கொடுத்த மாத்திரை யாவான்.
-ஓவர்பரி
★ ★ ★
25. பழி வாங்குதல்
பழிவாங்குதல் ஆரம்பத்தில் இனிக்கும். ஆனால், சிறிது போதில் கசப்பாக மாறிவிடும். அது எய்தவனையே திரும்பிவந்து கொல்லும் அம்பாகும்.
-மில்டன்