88
உலக அறிஞர்களின்
ஜனங்கள் இறந்தோரைப் பேசுவது போலவே இருப்போரையும் பேசுவார்களானால் எவ்வளவு நன்மையாய் இருக்கும்?
மொழிகள் மண்ணுலகின் புத்திரிகள்; செயல்கள் விண்ணுலகின் புத்திரர்கள்.
எண்ணங்களுக்கு மொழிகள் எப்படியோ அப்படியே நற்குணத்துக்கு உபசாரம்.
இருட்டறையில் மின்மினி வந்தால் எப்படி அறையில் இருளை மறந்து பூச்சியின் அழகைப் பருகுகிறோமோ, அப்படியே நமக்குத் துன்பம் வந்த சமயம் யாரேனும் இனிய மொழி பகர்ந்தால் நம் துன்பங்களை மறந்து அந்த மொழியின் இனிமையை உணர்கின்றோம்.
★ ★ ★
31. சொல்
சூரிய கிரணங்கள் போன்றவையே சொற்கள்; அதிகமாக ஒருமுகப்பட்டால் அக்கினியாய்ச் சுடும்.
நன்றாய்ப் பேசும் ஆற்றல் இன்மையும், நாவை அடக்கும் ஆற்றல் இன்மையும் பெரிய துர் அதிர்ஷ்டங்களாகும்
சபையில் பேசாத காரணம் என்ன? முட்டாளாய் இருப்பதா, மொழிகள் கிடைக்கவில்லையா? -முட்டாள் ஒருநாளும் நாவை அடக்க முடியாது.