பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி ** 133 ஊதாரியாயிருப்பவன் விரைவிலே ஏழையாவான். வறுமை யால் அவன் பிறரை அண்டி வாழ நேரும், அவனிடம் ஊழல் களும் மலிந்துவிடும். அ. ஜான்ஸன் செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குதலே அதிகச் செலவும். ஊதாரித்தனமுமாகும். அ தியோஃப்ரேஸ்டஸ் எங்கும் நிறைந்தவர் ஒருவர் உள்ள இடத்தில் கடவுள் இரண்டாமவராக உள்ளார்: இருவர் உள்ள இடத்தில், கடவுள் மூன்றாமவராக உள்ளார். அ முகம்மது நபி மானிட சமூகத்தை ஒரு குடும்பமாக அமைத்து, தாம் தந்தையாயிருந்து. உலகை நம் வீடாக்கிய கடவுள் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார். அ காலெரிட்ஜ் எதிர்காலம் நாம் எப்பொழுதும் எதிர்காலத்தையே நோக்கிக்கொண்டிருக் கிறோம்; நிகழ்காலம் நமக்குத் திருப்தியளிக்கவில்லை. நமது இலட்சியம் எதுவாயிருப்பினும், எதிர்காலத்திலேயுள்ளது. அ. கில்லெட் இளைஞர்களுக்கு எதிர்காலம் ஒரு தேவதை உலகமாக உள்ளது. * стултетот நாளை என்ற ஒவ்வொரு நாளைக்கும் இரண்டு கைப்பிடிகள் உள்ளன. கவலை என்ற பிடியினாலோ. நம்பிக்கை என்ற பிடியினாலோ நாம் அதைப் பிடித்துக்கொள்ளலாம் எதிர்காலமே நமது குறிக்கோள். நாம் ஒரு போதும் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. வாழப்போவதாக நம்பிக்கொண்டு