பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி : 231 எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுடைய மகன் புதுமைக் கதையான ஒரு நாவலைத் தீண்டிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். “ (wno () im Wo இப்பொழுது வெளிவரும் நவீனங்களுள் முக்கால் பகுதி அறிவை நலிவுறச்செய்து கற்பனையைக் குன்றச் செய்து உருசியையும் நடையையும் கொச்சையாக்கிவிடுகின்றன. வாழ்க்கையையும் மனித இயற்கையையும்பற்றி உண்மைக்கு மாறான கருத்துகளை அளிக்கின்றன; எல்லாவற்றிற்கும் மேலாக, அறிவு வளர்ச்சிக்குரிய அருமையான நேரத்தை வீணாக்குகின்றன. * նմւա ուսi, சிறந்த முறையில் அமைந்த நாவல், நாகரிகத்தை வளர்ப்பதற் காகக் கண்டுபிடிக்கப்பட்ட உயர்ந்த கருவிகளுள் ஒன்றாகும் .', 'வா. செல் நாவல்கள் தங்கள் வாசகர்களைப் பாவம் செய்யத் துண்டுவ தில்லை. ஆனால், எப்படிச் செய்யவேண்டும் என்பதை மட்டும் அவர்களுக்குக் கற்பிக்கின்றன. பிம்மர்மன் நன்மை செய்தல் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நன்மை செய்தலே உண்மையான இன்பம் அளிக்கும் செயல். பi பி.பிட்னி துன்பத்தைக் கண்டு இரங்குதல் மனித இயல்பு அதை நீக்குதல் தெய்விகமாகும். . எமர்ஸன் நாம் பிறருக்கு அளிக்கும் இன்பத்திலேயே நமக்கு மகிழ்ச்சி இருக்கின்றது. அ டுமாஸ் மனிதர்கள் தங்களுடன் சேர்ந்த மற்ற மனிதர்களுக்கு நன்மை செய்வதிலேயே தேவர்களைப் போல விளங்குகின்றனர். வேறு எதிலும் அவ்வாறு விளங்குவதில்லை. - எலிலரோ