பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

107



எகிப்து நாட்டின் உயிர்நாடியாக இருக்கும் சூயஸ்கால்வாயை பிரிட்டன் ராணுவப் படைகள் நாற்புறமும் நாசர் பயத்தால் அணிவகுத்துக் காத்து நின்றன. நாசர் அந்தப் படைகளுக்குள்ளே தனது படைகளைப் புகுத்தி விரட்டியடித்தார்! பிரிட்டன் படைகளையும், வல்லரசு சக்திகளையும் அங்கே ஓட ஓடத் துரத்தியடித்தார்.

சூயஸ்கால்வாயை வருமானம் வரும் கப்பல் போக்குவரத்து கடல் பாதையாக்கினார்! எகிப்து நாட்டின் தேசிய சொத்து சூயஸ் கால்வாய் என்று உலகநாடுகள் உணர நாசர் பிரகடனப்படுத்தினார்.

கொதித்து எழுந்தது பிரிட்டன் அரசு விமானப்போரை ஏவித் தாக்கியது; தாய்நாட்டுக்குச் சேவை செய்கிறோம் என்ற தேசபக்திக்கனலிடையே, பிரிட்டிஷ் தாக்குதல் நாசர் படைத்தாக்குதலின் முன்பு சருகுகளைப் போல தீய்ந்து சாம்பலானது. பிரிட்டன் நாசரிடம் பின் வாங்கி ஓடிய சம்பவம் உலக நாடுகள் இடையே நாசரின் செல்வாக்கை உயர்த்தும் படிக்கல்லானது. நாளடைவில் நாசர் அதனால் உலக அரசியலில் புகழ்ச்சிகரமாக விளங்கினார். எகிப்து மக்களும் அவருக்குத் துணையாக நின்றார்கள்.

நாசரின் உலக அரசியல் புகழ் வளர்ச்சி, அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் தீராத எரிச்சலைப் புகையாகப் பரப்பிக் கொண்டிருந்தன. ஆனாலும், இனி எகிப்து நாட்டையும், நாசரையும் ஒன்றும் செய்யமுடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டன.