116
உலக வரலாற்றில்
நாட்டைவிட்டே ஓடிப்போகும் பரிதாபநிலை ஏற்பட்டுவிட்டது.
காபூலைப் பிடித்துவிட்ட கொள்ளைக்காரன் பாச்சா இ சேக்கோவின் பத்துமாதப் பயங்கர ஆட்சியில் அமானுல்லா மேற்கண்ட சீர்திருத்தச் சட்டங்கள் எல்லாம் பாழாகி விட்டன.
அமானுல்லாவின் சமுதாயச் சீர்திருத்தச் செயல்களை எல்லாம் அந்தக் கொள்ளைக்காரன் பாச்சா நாசமாக்கியதுடன் நில்லாமல், மீண்டும் அமானுல்லா தலைதூக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அவருடைய செயல்களை எல்லாம் அழித்துவிட்டான்.
ஆனால், உலகநாடுகள் எல்லாம் இந்த அழிவுச்சக்தியை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் காலம் கடந்துவிட்ட அழிவுச் சக்தியை மீண்டும் தடுத்து நிறுத்த அமானுல்லாவுக்கு உதவிசெய்திட காலம் போதாமல் போய் விட்டது. எனவே, அமானுல்லா தேசப் பற்று, மக்கள் இடையே தோற்றுவிட்டது
ஆனால், உலகப் பத்திரிகைள் எல்லாம் அமானுல்லாவைப் பற்றி என்ன எழுதின தெரியுமா?
“ஆப்கானிய இளைஞர் உலகத்தில் அமானுல்லா சீர்திருத்த விதைகளை விதைத்து விட்டார். அவை ஒரு காலத்தில் முளைத்தே தீரும்.” என்று எழுதி தங்களது ஆறுதல் அனுதாபங்களைத் தெரிவித்தன.